திருகோணமலையிலும் சுகாதார விதிமுறைகளை மறந்து மதுபானசாலைகளில் திரண்ட கூட்டம்
நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் திருகோணமலையில் அனைத்து மதுபானசாலைகளும் திறந்து வியாபாரம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் அனைத்து மதுபானசாலைகளையும் நேற்று (17) முதல் திறப்பதற்கு ஹலால் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவலை அடுத்து மதுபானசாலைகள் திறக்கப்பட்டதாக நேற்றைய தினம் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் திருகோணமலை நகரிலும் திறக்கப்பட்ட மதுபானசாலைகளில் பெருமளவானோர் கொட்டும் மழைக்கு மத்தியில் சுகாதார விதிமுறைகளை மறந்து நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபான போத்தல்களை கொள்வனவு செய்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கோவிட் தொற்று அச்சுறுத்தலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் மதுபானசாலைகளில் உரிய சுகாதார நடைமுறைகள் இன்றி பெருமளவானோர் திரண்டு வருகின்றமையானது எதிர்காலத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி....
போலிச் செய்தியால் மதுபானசாலைகளில் நிரம்பி வழிந்த கூட்டம்
வவுனியாவில் மதுபானசாலைக்கு முன் திரண்ட குடிமக்கள்!