விமல் வீரவன்சவின் முன்னாள் ஊடகச்செயலாளர் FCIDயினால் கைது
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் முன்னாள் ஊடகச்செயலாளர் பிரசாத் மஞ்சு, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவால் (FCID) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
வீரவன்ச அமைச்சரவை அமைச்சராக பணியாற்றிய காலத்தில், அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான வாகனங்கள் மற்றும் எரிபொருள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் முறைப்பாடு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டை உலுக்கிய பெரும் சோகம் - முதியோர் இல்லத்தில் தீயில் கருகி பலியான 13 பேர் - வெளியான அதிர்ச்சி தகவல்
நிதிக்குற்றப்புலனாய்வுப்பிரிவு விசாரணை
அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் வாகனங்கள் மற்றும் எரிபொருள் உள்ளிட்ட வளங்கள் அனுமதியின்றிப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பான முறைப்பாட்டிற்கமைய, கைது முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் பிரிவு கூறியுள்ளது.

மேலும் விசாரணைகள் நிதிக்குற்றப்புலனாய்வுப்பிரிவால் (FCID) நடத்தப்பட்டு வருகின்றன.