விமல் வீரவன்சவுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள சட்டநடவடிக்கை
கர்தினாலின் கருத்துக்கள் தொடர்பாக விமல் வீரவன்சவுக்கு கர்தினாலின் தரப்பிலிருந்து சட்டக்கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கர்தினால் மெல்கம் ரஞ்சித் "தெய்வீக எச்சரிக்கை" காரணமாக 2019 உயிர்த்த ஞாயிறு ஆராதனையைத் தவிர்த்தார் என தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் விமல் வீரவன்ச தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் இந்த கடிதம் அனுப்பப்படவுள்ளது.
சட்டக்கடிதம்
கொழும்பு மறைமாவட்டத்தின் அருட்தந்தை சிறிரில் காமினி, அந்தக் கூற்றை மறுத்ததுடன், அது தவறானது மற்றும் தவறாக வழிநடத்தும் கருத்து எனவும் கூறினார்.
கர்தினால் பாரம்பரியமாக நள்ளிரவு ஆராதனையை நடத்துகிறார் எனவும் 2019 ஆம் ஆண்டிலும் அவர் அதனையே செய்தார் எனவும் அவர் குறிப்பிட்டர்.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் கர்தினால் காலை ஆராதனைகளை நடத்துவதில்லை எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.
கருத்துச் சுதந்திரம் பாதுகாக்கப்பட்டாலும், அது ஆதாரமற்ற கூற்றுகளைப் பரப்புவதை அனுமதிக்காது என்றும், விமல் வீரவின்சவின் கருத்தை திருத்தம் செய்ய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்தார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 11 ஆம் நாள் திருவிழா





ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

இந்தியா-ரஷ்யா புதிய ஒப்பந்தம்: ரயில்வே, அலுமினியம், சுரங்க தொழில்நுட்பங்களில் கூட்டு முயற்சி News Lankasri
