கோட்டாபய அரசுக்கெதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டு வெற்றியளிக்குமா?
நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கம் ஏற்பாடு செய்த எதிர்கட்சிகளின் அனைத்து கட்சி கூட்டணியின் முதலாவது சந்திப்பு பம்பலப்பிட்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடத்தப்பட்டது.
இந்த பேச்சுக்களில் ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ருவன் விஜயவர்த்தன, தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் மனோ கணேசன் உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
இதில் கலந்து கொண்ட முக்கியஸ்தர்கள் கருத்து வெளியிடுகையில்,