அனைத்து அரசியல் மேடைகளிலும் பாடுவதற்கு தயார்: ரஞ்சன் ராமநாயக்க திட்டவட்டம்
அனைத்து அரசியல் மேடைகளிலும் தாம் பாடுவதற்கு தயாராக உள்ளேன் என முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ ஏற்பாடு செய்திருந்த அரசியல் கூட்டமொன்றில் ரஞ்சன் ராமநாயக்க பாடல் பாடியிருந்தார்.
குறித்த அரசியல் கூட்டத்தில் பாடகராக தாம் மேடையில் ஏறியதாகவும், அரசியல் நோக்கத்திற்காக இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேடையில் பாடுவதற்கு அழைப்பு
“பாடகர் என்ற ரீதியில் மேடையில் பாடுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பினை ஏற்றுக்கொண்டேன்.
தாம் ஒர் தொழில்முறைப் பாடகர். யார் அழைத்தாலும் எந்தவொரு அரசியல் மேடையிலும் பாடல் பாடத் தயார்.
தாம் நடிப்பதிலும் பாடுவதிலும் தற்பொழுது ஈடுபட்டுள்ளளேன். தமது சிவில் உரிமை இரத்து செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எந்தவொரு தரப்பினரும் தமது சிவில் உரிமைகளை மீள வழங்குவதற்கு முயற்சிக்கவில்லை. வாக்குறுதிகள் அளிக்கப்பட்ட போதிலும் அவை நிறைவேற்றப்படவில்லை.” என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மகனின் திருமண வரவேற்பில் எடப்பாடிக்கு பிரம்மாண்ட ஏற்பாடு.., எஸ்.பி வேலுமணி போடும் திட்டம் News Lankasri

டாக்டராக இருந்து ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., 7 ஆண்டுகளுக்கு பிறகு ராஜினாமா செய்து தற்போது செய்யும் வேலை? News Lankasri
