நாடாளுமன்றில் இன்னும் சில நாட்களில் பெரும்பான்மையை நிரூபிப்போம்!- லச்மன் கிரியெல்ல
தமது கட்சி அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை காண்பிக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின நாடாளுமன்ற உறுப்பினர் லச்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
எனினும் அது எவ்வாறு நிரூபிக்கப்படும் என்று என்பதை வெளிப்படுத்தமுடியாது என்று அவர் ஊடகவியலாளர் மத்தியில் தெரிவித்துள்ளார்.
முதலில் ஜனாதிபதி தனது பதவியில் இருந்து விலக வேண்டும், பின்னர் அரசாங்கத்தின் சமநிலையை உறுதிப்படுத்த அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் பின்பற்றப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிடப் போவதில்லை என குமார வெல்கம தெரிவித்துள்ள போதிலும் அவர் இன்னும் தம்முடன் இணைந்து செயற்படுவதாக கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலம் கருத்து தெரிவிக்கையில்,
19 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாகச் செயற்படுத்துமாறு மகாநாயக்க தேரர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், 20 ஐ நீக்குவதற்கு ஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டத்தில் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இப்படியானவர்களுடன் எப்படி இடைக்கால அரசை முன்னெடுப்பது? எதிரணிக்குரிய பொறுப்பை நிறைவேற்றவே மக்கள் எமக்கு ஆணை வழங்கியுள்ளனர்.
எனவே,
இடைக்கால அரசில் இணைய வேண்டிய தேவை எமக்கு கிடையாது.
நாடாளுமன்றத்தில் அரசு பெரும்பான்மைப் பலத்தை இழந்துவிட்டது. எதிரணிப்
பக்கம்தான் பெரும்பான்மைப் பலம் உள்ளது. எதிர்வரும் 4ஆம் திகதி அதனை
நிரூபிப்போம்" எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.



