ஜெனிவா நெருக்கடியிலிருந்து அரசைக் காப்பாற்றுவோம்: சஜித் உறுதி
"ஜெனிவாவில் இலங்கைக்குக் காத்திருக்கும் நெருக்கடிகள் தொடர்பில் நாம் அரசுக்கும் நாட்டுக்கும் சார்பாகவே செயற்படுவோம்"என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தில் பெரிய பிரச்சினைகள் உள்ளன. இவ்வாறான நிலையில் நாடு தற்போதும் மிகப்பெரும் அபாய நிலைக்குக் கொண்டு செல்லப்படுகின்றது.
நாட்டுக்காகவே செயற்படுவோம்
இந்த மாதம் ஜெனிவாவில் இலங்கைக்குப் பெரிய நெருக்கடிகள் காத்திருக்கின்றன. ஜெனிவா நெருக்கடிகளைப் பொறுத்தவரையில் நாம் அரசுக்கும் நாட்டுக்கும் சார்பாகவே செயற்படுவோம்.
நாம் மற்றவர்களைப் போன்று பெட்டிகளுடன் ஜெனிவாவுக்குச் செல்ல மாட்டோம். எமது நாட்டைப் பற்றி ஒருபோதும் வெளிநாடுகளுக்குப் புறம் சொல்லவோ முறையிடவோ மாட்டோம். நாட்டுக்காகவே செயற்படுவோம்" என கூறியுள்ளார்.
பிரதமரின் உறுதி
இதேவேளை, ஜெனிவா அமர்வில் இலங்கைக்கு எதிராக எத்தகைய பிரேரணைகள் வந்தாலும் அது சவாலாக அமையாது என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
மேலும் ஜெனிவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கையின் நிலைப்பாட்டை அரசு சமர்ப்பிக்கும். இந்த மாநாடு இலங்கைக்கு சவாலாக அமையாது என்றே நாம் கருதுகின்றோம்.
இலங்கை தொடர்பில் என்ன பிரேரணை வந்தாலும் அதனை அரசு எதிர்கொள்ளத் தயாராகவுள்ளது என கூறியுள்ளார்.





புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
