ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க அனுமதிக்கப்போவதில்லை:ஹரினி அமரசூரிய
ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க அனுமதிக்கப்போவதில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படுவதற்கு எவரும் இணங்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் மகளிர் அணி கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வீதியில் இறங்கி போராட்டம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு கைதேர்ந்தவர் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவதனை பெண்களாகிய தாம் அனுமதிக்கப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டால் தும்புத்தடியுடன் வீதியில் இறங்கி பெண்கள், போராட்டம் நடத்துவார்கள் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |