மூன்று வருடங்களை இலங்கை வரலாற்றில் மிகவும் முன்னேறிய காலகட்டமாக மாற்றுவோம்: ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சபதம்

Srilanka School Johnston Fernando Road Gotapaya Rajapaksa
By Kanamirtha Dec 29, 2021 11:45 AM GMT
Report

எதிர்வரும் மூன்று வருடங்களை இலங்கை வரலாற்றில் மிகவும் முன்னேறிய காலகட்டமாக மாற்றுவோம் என ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

7200 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்ட பேராதனை - பதுளை - செங்கலடி (A005) வீதியின் பிபிலை முதல் செங்கலடி வரையிலான 86.7 கிலோமீற்றர் பகுதியைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆளும் தரப்பு பிரதம கொறடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவின் நிதியுதவியுடன் நேற்று மக்களின் பாவனைக்காக வீதி திறந்து வைக்கப்பட்டது. இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்பொழுது பல்வேறு பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. கிராமத்திற்குச் சென்றால் அரசாங்கத்திற்கு எதிராகக் கூச்சல் போடுவர் எனச் சிலர் சொல்கின்றனர். தற்பொழுது நாம் கிராமத்துக்கு வந்திருக்கிறோம். அந்தப் பிரசாரங்கள் இன்று பொய்யாக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகள் பொய் சொல்ல முடியாத அளவுக்கு அனாதரவாக உள்ளன.

நாம் இந்த நாட்டை கட்டியெழுப்பி வருகிறோம். இந்த நாட்டை அபிவிருத்தி செய்து வருகிறோம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த நாட்டின் பாதுகாப்பைச் சிறந்த முறையில் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான எமது அரசாங்கம் இந்நாட்டில் வாழும் சிங்கள, முஸ்லிம், தமிழ், பர்கர் என அனைத்து சமூகத்தினருக்கும் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. இந்த நாடு பாதுகாப்பற்ற நாடாக மாற ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

அனைத்து இனத்தவர்களும் ஒன்றாக வாழும் வகையில் இந்த நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வோம். அடுத்த 3 வருடங்களை இலங்கை வரலாற்றில் மிகவும் முன்னேறிய காலகட்டமாக மாற்றுவோம்.

இந்நாட்டின் முழு வீதி வலையமைப்பும் நவீனமயமாக்கப்படும். சுபிட்சத்தின் நோக்கு தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 100,000 கிலோமீற்றர் நீளமான வீதிகளை நிர்மாணிப்பதாக உறுதியளித்தார்.

கோவிட் தொற்றுநோய் காலத்திலும் நாங்கள் அதனை ஆரம்பித்தோம், இவை ஜனாதிபதியின் வாக்குறுதிகள். கிழக்கு மாகாணத்தில் மட்டும் சுமார் 800 வீதிகளை அமைத்து வருகின்றோம். கிராமங்களில் உள்ள மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த வீதிகளை அமைப்பதற்காக இம்மாவட்ட அரசியல் தலைமைகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றோம்.

இந்த நாட்டில் நவீன வீதி வலையமைப்பை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பாகும். விவசாயிகள் தங்களின் உற்பத்திப் பொருட்களை விரைவில் நகரத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும், பாடசாலை செல்லும் மாணவர்கள் விரைவில் பாடசாலைக்குச் செல்ல வேண்டும். கடந்த காலங்களில் இந்த வீதிகளில் புழுதி மற்றும் சேறும் சகதியுமாக இருப்பதால் மக்கள் பயணிக்கச் சிரமப்பட்டனர்.

விரைவாக நாடு முழுவதும் பயணிக்க உதவும் நவீன வீதி வலையமைப்பை உருவாக்குவதே எங்கள் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். எமது அரசாங்கத்திற்கு முஸ்லிம் நாடுகள் உதவுவதில்லை என்ற கருத்தை எதிர்க்கட்சிகள் பரப்ப முயற்சிக்கின்றன.

அதுதான் எதிர்க்கட்சிகளின் அரசியல் போக்காகும். உலக வங்கி எங்களுக்கு உதவவில்லை என்று நினைக்கிறார்கள். வீதிகளை அமைக்க உலக வங்கி 500 மில்லியன் டாலர் அல்லது அரை பில்லியன் டாலர்களை வழங்கியது.

மேலும் வீதிகள் அமைக்கச் சவுதி நிதி எங்களுக்குப் பணம் வழங்கியுள்ளது. முஸ்லிம்களுக்கும் எங்களுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. தமிழர்கள், கத்தோலிக்கர்கள், பர்கர்கள், மலாய்க்காரர்கள் என பிரிவினையை ஏற்படுத்துவது எதிர்க்கட்சிகளின் பணியாக உள்ளது.

எமது அரசாங்கம் எதிர்க்கட்சிகளைப் போன்று மக்களைப் பிளவுபடுத்தும் அரசல்ல. எமது ஜனாதிபதியின் வருகையின் பின்னர் முழு நாட்டு மக்களும் பாதுகாக்கப்பட்டனர். இன்று முஸ்லிம்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. கத்தோலிக்கர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. பௌத்தர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

மலாய், பர்கர்களும் ஒரு பிரச்சினையும் இல்லை. வங்குரோத்தானவர்கள் தான் இப்படிப் பிரிவினைகளைப் பேசுகிறார்கள். முஸ்லிம் நாடுகளுடனான எமது உறவு அவ்வாறாக உள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முஸ்லிம் வெளிநாட்டு உறவுகளைப் பாலஸ்தீனத்திலிருந்து ஆரம்பித்தார். முஸ்லிம் நாடுகள் நமது நட்பு நாடுகள். அவை நமது நண்பர்கள். அந்த உறவைத் தான் எதிர்க்கட்சிகள் உடைக்கப் பார்க்கின்றன.

இந்த நாடுகளுடன் கோட்டாபய ராஜபக்ச மிகவும் நட்புறவைக் கொண்டுள்ளார். எதிர்க்கட்சிகள் வாக்குகளைப் பெறுவதற்காக இனங்களையும் மதங்களையும் பிரிக்கின்றன. அதைத்தான் பிரேமதாசவும் செய்தார். மட்டக்களப்பு மாவட்டம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசமாகும். அந்த மாகாணத்தில் வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள மக்களுக்கான பெரும்பாலான அபிவிருத்திப் பணிகளைச் செய்தார். எனினும் பெரும்பாலான மக்கள் நல்லாட்சி அரசாங்கத்திற்கு வாக்களித்துள்ளனர்.

இந்தப் பிரதேசங்களுக்கு நல்லாட்சி அரசாங்கம் என்ன செய்தது? அவர்கள் உங்களுக்குச் செய்த சேவை ஏதேனும் உண்டா? இப்பிரதேசங்களில் பெரும்பாலான வீதிகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நிர்மாணிக்கப்பட்டவையாகும்.

இப்போது கோட்டாபய ராஜபக்ச பெரும்பாலான வீதிகளை அமைத்து வருகிறார். இந்த முஸ்லிம்களுக்கு நல்லாட்சி அரசாங்கம் என்ன செய்தது? மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஏதாவது செய்ததா என்று கூற முடியுமா? திருகோணமலைக்கோ அம்பாறைக்கோ எதுவும் செய்யப்படவில்லை.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாங்கள் வாக்களிக்காவிட்டாலும், குறைந்த சதவீதத்தையே பெற்றிருந்தாலும், இவர்கள் அனைவரையும் நேசிக்கின்றார். எனவே, அவர் முழு நாட்டிற்கும் சேவையாற்றுகிறார். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பாலம் நிர்மாணிக்கப்படுகிறது.

தேர்தலை எதிர்பார்த்தலின்றி மக்களின் பொருளாதாரத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் மேம்படுத்த வேண்டிய நோக்கிலே செயற்படுகிறோம். ஏமாற வேண்டாம் என்று வடக்கு கிழக்கு மக்களிடம் கோருகிறோம்.

வெறுப்புடன் வாழ வேண்டாம் . ஐ.தே.க., பிரேமதாச, திஸாநாயக்க ஆகிய அனைவரும் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள். அவர்கள் உங்கள் வாக்குகளை மட்டுமே பெறுகிறார்கள். எமக்கு வாக்களிக்காவிட்டாலும் உங்களுக்காகச் சேவையாற்றுவோம் என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US