கிரான்குளத்தில் காட்டு யானைகளை துரத்தும் பணி இரவிலும் முன்னெடுப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் எழுவான் நிரப்பரப்பிற்குள் கடந்த இரண்டு மாதகாலமாக மட்டக்களப்பு வாவியோரமுள்ள சதுப்பு நிலப்பரப்பிற்குள் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் (04.11.2025) இரவு மட்டக்களப்பு கிரான்குளம் கிராமத்தில் காட்டு யானைகள் சஞ்சரித்துள்ளது.
யானை துரத்தும் பணி
இதன்போது சம்பவ இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் மண்முனை பற்று பிரதேச சபை தவிசாளர் செந்தில்குமார் ஆகியோர் சென்று வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து காட்டு யானைகளை துரத்தும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த காட்டு யானைகளை துரத்தும் பணியில், மட்டக்களப்பு வன ஜீவராசிகள் திணைக்களத்தினரும், இராணுவத்தினரும் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.
அமெரிக்காவில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்து சிதறிய விமானம்! பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விபத்து






கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam