புத்தளத்தில் மீட்கப்பட்ட காட்டு யானையின் சடலம்
புத்தளம் வண்ணாத்திவில்லு இரணவில்லு பகுதியில் காட்டு யானை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, குறித்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த பகுதிக்குச் சென்று உயிரிழந்த யானையை பார்வையிட்டனர்.
உடற்கூற்று பரிசோதனை
குறித்த யானை கைவிடப்பட்ட விவசாய கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இதன்போது தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த யானை 30 வயது என மதிக்கப்பட்டுள்ளதாகவும் 8 அடி உயரம் கொண்டு காணப்படுவதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த யானைக்கு மிருக வைத்தியரினால் உடற்கூற்று பரிசோதனை முன்னெடுக்க உள்ளதாக இதன்போது கூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri
