திருகோணமலையில் விவசாய கிணற்றில் விழுந்த காட்டு யானை (Video)
திருகோணமலை - கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவசாய பகுதியில் காட்டு யானையொன்று கிணற்றில் தவறி விழுந்துள்ளது.
பன்னிரண்டு வயதுடைய யானைக்குட்டியொன்றே நேற்று மாலை கிணற்றுக்குள் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுன்னக்காடு பகுதியிலிருந்து உணவு தேடி சூரியபுர கிராமத்திற்கு வந்த காட்டு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று கொண்டிருந்த போது பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்ததாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சூரியபுர பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் கிராம மக்களுடன் இணைந்து வெட்டப்பட்ட கிணற்றில் இருந்த குறித்த யானை பெக்கோ இயந்திரம் மூலம் மீட்கப்பட்டு சுன்னக்காட்டிற்குள் விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் கோதுமை மாவுக்குத் தட்டுப்பாடு |