விஜயதாசவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல்
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கு (Wijeyadasa Rajapakshe) எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி அறிவித்துள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் (Sagara Kariyawasam) இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கட்சியின் உறுப்புரிமையை பெற்றிருக்கும் தருணத்தில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமை பெற்றுக்கொண்டமை தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பொதுஜன முன்னணியின் கட்சி உறுப்புரிமை பெற்றுக் கொண்ட நிலையில் வேறும் கட்சிகளின் உறுப்புரிமையை பெற்றுக் கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்கும் அபாயம்
ஏதேனும் ஓர் சந்தர்ப்பத்தில் விஜயதாச ராஜபக்ச ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை பெற்றிருந்தால் அவரினால் தொடர்ந்தும் பொதுஜன முன்னணியின் உறுப்பினராக பதவி வகிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
விஜயதாச ராஜபக்ச ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி உறுப்புரிமையை இழந்தால் அவரது நாடாளுமன்ற உறுப்புரிமையும் சவாலுக்கு உட்படுத்தப்படும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 11 மணி நேரம் முன்

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
