அநுர அலையின் பின்னர் அரசியலிலிருந்து ஒதுங்கும் மற்றுமொரு முக்கிய அரசியல்வாதி
முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapaksa) அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்;
இதன்படி எதிர்காலத்தில் எந்தவொரு தேர்தலிலும் தான் போட்டியிடப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மத நிகழ்வு ஒன்றின் பின்னர், அவரின் அரசியல் எதிர்காலம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பொதுக்கருத்து
ஊடகங்களால் உருவாக்கப்பட்ட ஒரு பொதுக்கருத்து, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் திருடர்கள் மற்றும் ஊழல்வாதிகள் என்று முத்திரை குத்தியுள்ளது.

எனவே, அதன் பகுதியாக இருக்க தாம் விரும்பவில்லை என்று விஜயதாச குறிப்பிட்டுள்ளார்.
சட்டமியற்றுபவர்கள் மீது நிலவும் எதிர்மறையான கருத்துக்களால் அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவதற்கான எந்த காரணத்தையும் தாம் உணரவில்லை என்றும் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, தேர்தலின் முன்னரும் பின்னரும் பல அரசியல்வாதிகள், அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ள நிலையிலேயே விஜயதாசவின் அறிவிப்பும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
என்னை எப்படி அப்படி கூறலாம், கண்டிப்பாக புகார் அளிப்பேன்... சீரியல் நடிகை கம்பம் மீனா காட்டம் Cineulagam
புதிய வெப் தொடரை இயக்கும் மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட்... யாரெல்லாம் நடிக்கிறாங்க பாருங்க Cineulagam
அறிவுக்கரசியால் ஜனனியின் தொழிலுக்கு ஏற்பட்ட பெரும் துயரம், எப்படி சமாளிக்க போகிறார்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri