விடுதலைப் புலிகளின் தலைவரை மறக்கவில்லை! விஜயதாசவிடம் ஆவேசத்தை வெளிப்படுத்திய சிறீதரன் (Video)
படித்தவர் நீங்கள், முட்டாள்களாக இருக்காதீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கு ஆவேசமாக கூறியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
“தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் 30 ஆண்டுகள் இளைஞர்களை பலவந்தமாக யுத்தத்தில் ஈடுபடுத்திக் கொண்டு வடக்கு, கிழக்கில் வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்தையும் அழித்தார்” என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பதிலளிக்கையில், அமைச்சரே நீங்கள் இப்போதும் விடுதலைப் புலிகளின் தலைவரை மறக்கவில்லை. நாங்களும் மறக்க மாட்டோம்.
வாழ்க்கை முழுவதும் மறக்க மாட்டோம். நீங்களும் மறக்க முடியாது ஏனென்றால் அவ்வளவு நேர்மையான, கண்ணியமிக்க ஒருவரே அவர் என குறிப்பிட்டுள்ளார்.
பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம்
அத்துடன் கிளிநொச்சிக்கு விஜயம் செய்து ரணில் விக்ரமசிங்க படம் காட்டிய போதும் இதுவரை 100 ரூபாவிற்கு கூட அங்கு நெல் கொள்வனவு இடம்பெறவில்லை என்பதை நான் பதிவு செய்கிறேன்.
பொய்யான தகவல்களை தயவு செய்து இந்த இடங்களிலே நீங்கள் பரப்ப வேண்டாம். நீங்கள் ஒரு அமைச்சர் இனவாதத்தை கொட்ட வேண்டாம். யுத்தம் முடிந்து 13 வருடங்கள் முடந்து விட்டன.
இந்த நாட்டில் இப்போது என்ன நடக்கிறது? இப்போதும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையா சொல்லப் போகின்றீர்கள்? தயவு செய்து சிந்தியுங்கள். படித்தவர் நீங்கள். முட்டாள்களாக இருக்காதீர்கள் என கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள் News Lankasri

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
