அச்சத்தில் உறைந்துள்ள நாட்டு மக்கள் - அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை
அண்மைக்காலமாக நாடாளவிய ரீதியில் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவம் குறித்து பொது மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்யும் இரண்டு நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லஸந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனைக் குறிப்பிட்டார்.
18 லீற்றர் என்று குறிப்பிட்டு, 12 லீற்றரை சந்தைக்கு விநியோகித்து, நுவர்வோரை அந்த நிறுவனம் தவறாக வழிநடத்தியிருந்தது.
இது தொடர்பில் தற்சமயம் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கேஸ் தொடர்பில் நிறுவனத்தின் பொறுப்பினை உரிய வகையில் மேற்கொள்ளத் தவறியமை வருத்தமளிக்கும் விடயம் எனவும் அவர் தெரிவித்தார்.