ரணில் ஏன் பௌத்த வாக்கு வங்கியை இழந்தார்?
நாட்டின் பிரதான பௌத்த பீடங்களில் ஒன்றான ராமஞ்ஞைய மஹா நிக்காய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு “ஸ்ரீலங்கா ஜனரஞ்சன” என்ற கௌரவ பட்டத்தை வழங்கியது.
இதற்கு முன்னர் இந்த கௌரவப்பட்டம் இலங்கையின் முதல் பிரதமரான காலஞ்சென்ற டி.எஸ்.சேனாநாயக்கவுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சஜித் பிரேமதாச , பௌத்த சாசனத்திற்கு செய்து வரும் சேவையை பாராட்டும் வகையில் ராமஞ்ஞைய நிக்காய கௌரவப் பட்டத்தை அவருக்கு வழங்கியுள்ளது.
சஜித் பிரேமதாச சசுனட அருண என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக நாடு முழுவதிலும் பின்தங்கிய நிலையில் உள்ள பௌத்த விகாரைகளை மேம்படுத்த உதவிகளை வழங்கி வருவது பௌத்த சங்க சபையினரின் பாராட்டை பெற்றுள்ளது.
சஜித் பிரேமதாச பௌத்த சாசனத்திற்கு சேவைகளை செய்து வரும் நிலையில், அவரது தாய் வீடான ஐக்கிய தேசியக் கட்சியின் பௌத்த வாக்கு வங்கி குறைந்துள்ளது.
கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்னர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பின்னர், அதன் பௌத்த வாக்கு வங்கி குறைய ஆரம்பித்தது.
ஐக்கிய தேசியக் கட்சியின் இணை அமைப்பான பிக்கு முன்னணி கலைக்கப்பட்டமையே இதற்கு காரணமாக அமைந்தது. இதன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆலோசனைகளை வழங்குவதில் இருந்து மஹா நாயக்க தேரர்களும் விலகிக்கொண்டனர். இதனால், ரணில் விக்ரமசிங்க பௌத்தத்திற்கு எதிரான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்று நோக்கப்பட்டார்.
டி.எஸ்.சேனாநாயக்க, டட்லி சேனாநாயக்க, ரணசிங்க பிரேமதாச மற்றும் டி.பி.விஜேதுங்க போன்ற ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தலைவர்கள் மஹா நாயக்க தேரர்களுக்கு மிக நெருக்கமானவர்களாக இருந்து வந்தனர்.
சேர் ஜோன் கொத்தலாவல, ஜே.ஆர். ஜெயவர்தன, ரணில் விக்ரமசிங்க ஆகிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் மாநாயக்க தேரர்கள் மற்றும் பௌத்த சங்க சபையினருக்கு தூர விலகி பணியாற்றிய தலைவர்கள்.
ரணில் விக்ரமசிங்க, சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மை கட்சிகளுக்கு சார்பானவர் என்ற தோற்றப்பாட்டை, தெற்கில் உள்ள சிங்கள பௌத்த மற்றும் தேசிய அமைப்புகள் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருந்தன.
அவர், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் சமாதான உடன்படிக்கையை செய்துகொண்டமையானது, புலிகளை வலுவிழக்க செய்ய வேண்டும் என்ற தந்திரமான நடவடிக்கையாக இருந்தாலும் சிங்கள பௌத்த மக்கள் மத்தியில், ரணில் விக்ரமசிங்க தேசப்பற்று இல்லாத தலைவர் என்ற நிலைப்பாடு ஆழமாக வேரூன்றியது.
சிங்கள பௌத்த மற்றும் தேசியவாத அமைப்புகள் இதனை மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்ற செய்தனர். இதுவும் ரணில் விக்ரமசிங்கவிற்கு பௌத்த வாக்கு வங்கியை இழக்க செய்தது.
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர் News Lankasri
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam