மறு வியூகம் ஒன்றை அமைக்குமா அரசாங்கம்?

Mahinda Rajapaksha Gotabhaya Rajapaksha Harsha De Silva Ajith Nivard Capral
By Benat Jan 13, 2022 06:41 PM GMT
Report

இலங்கை இவ்வாண்டு இறுதியில் 6.9 பில்லியன் டொலர் கடனை மீள செலுத்த வேண்டியுள்ளது. இதில் 2.6 பில்லியன் டொலர் உள்நாட்டு கடனாகும். இந்நிலையில் இம்மாதம் 18 ஆம் திகதி 500 மில்லியன் டொலர் பிணை முறி கடனை மீள செலுத்த வேண்டியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா  தெரிவித்துள்ளார்.

 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் சீனா மற்றும் இந்தியாவிடம் கடன் தவணைகளை மீள செலுத்துவதற்கான காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை விடுத்திருக்கின்றனர். எனினும் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் பிணை முறி கடனை மீள செலுத்துவதற்கான மறுவியூகமொன்றை அமைக்க முற்படாமலிருப்பது ஏன் என்றும்   ஹர்ஷ டி சில்வா கேள்வியெழுப்பியுள்ளார்.

கொழும்பில் இன்றையதினம்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

இம்மாதம் 18 ஆம் திகதி 500 மில்லியன் டொலர் கடனை மீள செலுத்த வேண்டியுள்ளது. இம்மாத இறுதியில் செலுத்தப்பட வேண்டியுள்ள மொத்த கடன் தொகை 1.3 பில்லியன்களாகும். இவ்வாண்டு இறுதியில் 6.9 பில்லியன் டொலர் கடனை மீள செலுத்த வேண்டியுள்ளது. இவ்வாறான நிலையில் எஸ்.என்.பி. சர்வ தேச தரப்படுத்தல் நிறுவனத்தின் தரப்பட்டியலில் இலங்கை மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதற்கமைய உஉஉ தரத்திலிருந்து உஉஉ - தரத்திற்குள் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் எதிர்காலத்தில் செலுத்தப்பட வேண்டியுள்ள கடன் தொகையை இலங்கையால் உரிய காலத்தில் செலுத்த முடியாது அல்லது அவ்வாறு நம்பிக்கை கொள்ள முடியாது என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் கடன்களை உரிய நேரத்தில் செலுத்தியுள்ளோம் என்று அரசாங்கம் தொடர்ந்தும் கூறிக் கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் செலுத்த முடியுமா என்பதே தற்போதுள்ள பிரச்சினையாகும்.

சர்வதேசத்தின் மத்தியில் இலங்கை மீதுள்ள நம்பிக்கை மீண்டும் மீண்டும் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. நாட்டில் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்குக் கூட டொலர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்திலும் கூட கடன் மீள் செலுத்துவதற்கான மறுவியூகமொன்றை அமைக்க முற்படாதது ஏன் என்பதே எமது கேள்வியாகும்.

 மக்கள் பாரதூரமான வாழ்வாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். மறுபுறம் முதலீட்டாளர்களும் கடனை மீள் செலுத்துவதற்கான மறுவியூகமொன்றை அமைப்பதை வரவேற்கின்றனர். ஆனால் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் அதற்கான நடவடிக்கை எடுக்காமைக்கான காரணம் என்ன? கடன் மீள் செலுத்துவதற்கான மறுவியூகமொன்றை அமைப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சீனாவிடம் கடன் தவணைகளை செலுத்துவதற்கான காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். சீனாவிடமிருந்து வணிக கடன்களே அதிகளவில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

இது மொத்த கடன் தொகையில் சுமார் 10 சதவீதம் மாத்திரமேயாகும். இதில் வட்டியின்றிய கடன் தொகையும் உள்ளடங்குகிறது. இவ்வாறு மிகக்குறைந்த கடன் தொகையை மீள செலுத்துவதற்கான காலத்தைக்கூட நீடிக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இதே போன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். முதலீட்டாளர்களும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் , மத்திய வங்கி ஆளுனர் மாத்திரம் பிணைமுறி கடனை மீள் செலுத்துவதற்கான மறுவியூகமொன்றை அமைக்க முடியாது என்று கூறுவதற்கான காரணம் என்ன? செலுத்தப்பட வேண்டியுள்ள 500 மில்லியன் டொலர் பிணை முறி கடனில் 170 மில்லியன் உள்நாட்டு கடன் என்று கூறப்படுகிறது.

அவ்வாறெனில் அந்த உள்நாட்டு கடன் வழங்குனர்கள் யார்? இதில் அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிப்பவர்களின் உறவினர்கள் அல்லது நண்பர் உள்ளனரா? அதன் காரணமாகவா இந்த கடனை செலுத்தியே தீருவோம் என்பதில் மத்திய வங்கி ஆளுனர் பிடிவாதமாகவுள்ளார்? பிணைமுறி கடனை மீள் செலுத்துவதற்கான மறுவியூகமொன்றை அமைத்தால் சர்வதேச நிறுவனங்களில் தரப்பட்டியலில் முன்னேற்றமடைய முடியும். அவ்வாறில்லை எனில் இந்த நெருக்கடியிலிருந்து மீள முடியாது என குறிப்பிட்டுள்ளார்.  

7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US