கோட்டாபய பதவி நீக்கிய ஆளுநரை ரணில் நியமித்தது ஏன்! பிரபாகரன் கேள்வி
"ஜனநாயக தேர்தலை நிறுத்துவதற்கு ஒத்தாசை புரிந்த பி.எஸ்.எம். சாள்ஸ் வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை மக்கள் ஜனநாயகத்தை கேள்வி குறியாக்கும் செயல்'' என ஐக்கிய மக்கள் சபையின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வன்னியசிங்கம் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
வட மாகாண ஆளுநர் தலைமை அலுவலகத்திற்கு முன்னால் இன்று (19.05.2023) இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“நடைபெற இருந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலை நிறுத்துவதற்காக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பதவியில் இருந்து பதவி விலகல் செய்தவர் தற்போதைய ஆளுநர் சாள்ஸ்.
தற்போது தனது சுப போகங்களுக்கும் பதவி ஆசைகளுக்கும் மக்களின் ஜனநாயகத் தேர்தலை கேள்விக்குறியாக்கியது மட்டுமல்லாது இலங்கையில் போட்டியிட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களின் நம்பிக்கையையும் சிதறடித்துள்ளார்.
ஜனாதிபதி பதவிக்காலம்
இவர் முன்னர் ஆளுநராக இருந்தபோது எமது பிரதேசத்தில் இடம்பெற்ற ஊழல் தொடர்பில் மூன்று மணித்தியாலங்கள் காத்திருந்து அவரிடம் தெளிவுபடுத்தினேன்.
ஆனால் அவருடைய காலத்தில் எவ்விதமான விசாரணைகளோ நடவடிக்கைகளோ இடம்பெறவில்லை.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, வட மாகாண ஆளுநராக நியமித்த நிலையில் தனது ஜனாதிபதி பதவிக்காலம் முடியும் முன்னரே அவரது பதவியை பறித்தார்.
அவரது பதவியை பறித்ததற்கு அவர் மீது இருந்த பல்வேறு ஊழல் முறைகேடுகள் காரணமாக அமைந்தது.
தகுதியான ஆளுநரை நியமிக்க வேண்டும்
ஆகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தான் நியமித்த ஆளுநரை பதவி நீக்கிய நிலையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஆளுநராக பதவி வழங்கியமை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
மேலும், ஊழல் முறைகேடுகளுடன் தொடர்பு இல்லாத மக்களின் தேவைகளை நிறைவேற்றக்கூடிய தகுதியான ஆளுநர் ஒருவரை ஜனாதிபதி நியமிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஏன் அணுகுண்டு மிரட்டல் விடுக்கவில்லை... வெளிவரும் அதன் பின்னணி News Lankasri

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri
