மகிந்தானந்த நலினுக்கு அடுத்து விசாரணையில் சிக்கப்போவது யார்! தூசுத்தட்டப்படும் 20 வழக்குகள்
முன்னாள் அமைச்சர்கள் மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் நலின் பெர்னாண்டோ ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இதேபோன்ற சுமார் 20 சம்பவங்கள் குறித்த விசாரணைகளை விரைவுபடுத்த அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த விசாரணைகளை விரைவுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ள சில சம்பவங்கள் 10 முதல் 15 ஆண்டுகள் பழமையானவை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிதுள்ளார்.
அந்த சம்பவங்கள் முந்தைய அரசாங்கங்களால் அடக்கப்பட்டன என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்
முந்தைய அரசாங்கங்களால் அடக்கப்பட்ட இந்த விசாரணைகளை மீண்டும் திறந்து விரைவுபடுத்துமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் குற்றப் புலனாய்வுத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
"இந்த விசாரணைகள் யாரைப் பற்றியது என்று இப்போது சொல்ல முடியாது. 20க்கும் மேற்பட்ட விசாரணைகள் குவிந்துள்ளன," என்று விஜேபாலா மேலும் கூறியுள்ளார்.
இந்த விசாரணைகள் அனைத்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் அமைச்சக அதிகாரிகளை உள்ளடக்கியது என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
சில விசாரணைகள் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் நடத்தப்படுவதாகவும் அமைச்சர் விஜேபால குறிப்பிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் துறையின் கீழ் நடத்தப்படும் விசாரணைகள் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காணி நிலம் வேண்டும் பராசக்தி 23 மணி நேரம் முன்

ரூ.3000 கோடி மதிப்பில் பீரங்கி குண்டுகள் ஏற்றுமதி - அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ரா பெரும் முயற்சி News Lankasri

பாதி உண்மை தெரிந்ததற்கே மயிலை வீட்டை விட்டு அனுப்பிய சரவணன் .. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ Cineulagam

பரிசோதிக்காமல் களமிறக்கிவிடப்பட்ட உக்ரைனின் புதிய ஆயுதம் - அதன் நிலை குறித்து வெளியான தகவல்கள் News Lankasri
