உயிர்த்த ஞாயிறு கொடூர செயலுக்கு உதவியவர்கள் யார்! அரசாங்கத்துக்கு விசேட அறிக்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குக் காரணமானவர்கள் யார், அந்தக் கொடூரமான செயலுக்கு உதவியவர்கள் யார் என்பதைக் கண்டறிவது அவசரமான விடயம் என இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு, வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் உள்ள கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு, உயிர்த்த ஞாயிறு பண்டிகைக்கான தனது சிறப்பு செய்தியில் இதனை கூறியுள்ளது.
குறித்த செய்தியில்,
அப்பாவி வழிபாட்டாளர்கள்
"அப்பாவி வழிபாட்டாளர்கள் மீது உயிர்த்த ஞாயிறு பண்டிகை அன்று குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதன் ஆறாவது ஆண்டு நிறைவை நாம் நினைவு கூறவுள்ளோம்.

கத்தோலிக்க மற்றும் பிற கிறிஸ்தவ தேவாலயங்களிலும், 2019 ஆம் ஆண்டில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் காயமுற்றும் இந்த தாக்குதல்கள் நடந்தன.
இந்த விடயத்தில், இந்த மிருகத்தனமான தாக்குதல் குறித்து சுயாதீனமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்வதற்கு தற்போதைய அரசாங்கத்தால் சில நேர்மறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை நாங்கள் கவனிக்கிறோம்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம், அவசரம் மற்றும் நீதியின் அடிப்படையில், விசாரணைகளின் இறுதி நோக்கம் குற்றவாளிகள் யார், அந்தக் கொடூரமான செயலில் உதவியவர்கள் யார் என்பதைக் கண்டறிவதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.
நமது நாட்டின் தலைவர்களுக்கு ஞானம் மற்றும் தைரியத்திற்காகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலுக்காகவும், குணமடைதலுக்காகவும் நாங்கள் தொடர்ந்து மனதார ஜெபிப்போம்," என்று இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் பிஷப் ஹரோல்ட் அந்தோணி பெரேரா மற்றும் பொதுச் செயலாளர் பிஷப் அந்தோணி ஜெயக்கொடி ஆகியோர் கையெழுத்திட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam