மாடுகளை திருட முயன்ற இருவர் பொதுமக்களால் மடக்கிப்பிடிப்பு: வவுனியாவில் சம்பவம் (Video)
வவுனியா- சமயபுரம் கிராமத்தில் மாடுகளை திருட முயன்ற இரு சந்தேகநபர்கள் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச்சம்பவம் நேற்றையதினம் (12.06.2023) பதிவாகியுள்ளது.
வவுனியா, நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமயபுரம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக கால்நடைகள் திருடப்படுகின்றமை அதிகரித்த வண்ணமே காணப்பட்டுகின்றன.
சமயபுரம் விநாயகர் வித்தியாலய வீதியில் மாட்டினை களவாட முயன்ற இரு நபர்களை பொதுமக்கள், பிடித்து வாகனம் ஒன்றில் கட்டி வைத்துள்ளனர்.
எனினும் சந்தேகநபர்களை நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொலிஸாரிடம் வழங்குவதற்கு பொதுமக்கள் மறுப்பு தெரிவித்ததையடுத்து வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் ஒப்படைத்துள்ளனர்.
பொலிஸாரின் கவனயீனம்
மேலும் இவ்விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
எமது கிராமத்தில் கால்நடைகள் களவாடப்படுகின்றமை தொடர்ந்த வண்ணமேயுள்ளது.
இதனால் எமது வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளதுடன் இரவில் நிம்மதியாக உறங்குவதற்கு கூட முடியவில்லை.
பல தடவைகள் கால்நடைகளை களவாடுபவர்களை பிடித்துக்கொடுத்தும் நெளுக்குளம் பொலிஸார் எவ்வித நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை என்பதினால் நாங்கள் தற்போது திருடர்களை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் ஒப்படைப்படைத்துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |













குட் பேட் அக்லி, தக் லைஃப் படத்தின் மொத்த வசூலை ஒரே நாளில் தாண்டிய குபேரா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam

ஈரானின் எச்சரிக்கை., B-2 பாம்பர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா - புதிய கட்டத்திற்கு செல்லும் மோதல் News Lankasri

மகனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்னுடன் காதல் - வருங்கால மருமகளை திருமணம் செய்யும் மாமனார் News Lankasri
