தமிழ்ப் பொது வேட்பாளர் யார்..! வவுனியாவில் நாளை தீர்மானம்

Sri Lankan Tamils Tamils Vavuniya Sri Lanka Presidential Election 2024
By Rakesh Aug 04, 2024 04:04 PM GMT
Report

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் சார்பில் களமிறக்கப்படும் பொது வேட்பாளர் யார் என்பது குறித்து நாளை திங்கட்கிழமை வவுனியாவில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்ப் பொது வேட்பாளர் பட்டியலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்திரநேரு சந்திரகாந்தன், பா.அரியநேத்திரன் ஆகியோரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் கே.வி.தவராசா மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலையில் குகதாசனுடன் மக்களை சந்தித்த ஜனாதிபதி ரணில்

திருகோணமலையில் குகதாசனுடன் மக்களை சந்தித்த ஜனாதிபதி ரணில்

பல்வேறுபட்ட சந்திப்புக்கள்

இந்த விடயம் சம்பந்தமாக மேலும் தெரியவருவதாவது, சிவில் அமைப்புக்களின் ஒருங்கிணைவு என்ற அடிப்படையில் ஸ்தாபிக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச்சபையின் ஏழு பிரதிநிதிகளும் அரசியல்கட்சிகள் ஏழினது பிரதிநிதிகளும் கூட்டிணைந்து தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பை ஸ்தாபித்திருந்தனர்.

இந்தப் பொதுக்கட்டமைப்பானது ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதற்காக பல்வேறுபட்ட சந்திப்புக்களை நடத்தியிருந்தது.

தமிழ்ப் பொது வேட்பாளர் யார்..! வவுனியாவில் நாளை தீர்மானம் | Who Tamil General Candidate

எனினும், ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படும் நபரைத் தெரிவு செய்வதற்காக நீண்ட பட்டியலொன்று தயார் செய்யப்பட்ட நிலையில் தற்போது சந்திரநேரு சந்திரகாந்தன், கே.வி.தவராசா, பா.அரியநேத்திரன் மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் இறுதிப்பட்டியலில் உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக அரசியல் கட்சிகள் சாராதவராகவும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணாகவும் வேட்பாளர் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தேடல்கள் இடம்பெற்றன.

பின்னர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அரசியல் சார்பற்ற ஆணாக இருந்தாலும் போதுமானது என்ற அடிப்படையில் தேடப்பட்டபோதும் பொருத்தமானவர்களை அடையாளம் காண முடிந்திருக்கவில்லை.

மட்டக்களப்பில் செந்தில் மற்றும் வியாழேந்திரனிடம் ஆதரவு கோரிய ஜனாதிபதி

மட்டக்களப்பில் செந்தில் மற்றும் வியாழேந்திரனிடம் ஆதரவு கோரிய ஜனாதிபதி

இறுதிப்பட்டியல்

அதனையடுத்து வடக்கில் இருந்து அரசியல் சாராத ஒருவரை களமிறக்குவதற்கு முயற்சிக்கப்பட்டபோதும் அதுவும் பலனளிக்கவில்லை. அதனையடுத்து தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சிவில் அமைப்பினர் பிரதிநிதிகளைக் கோரியபோதும் அவர்களும் பின்னடித்தனர்.

இதற்கிடையில் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் கட்சி மற்றும் சின்னம் சம்பந்தமாகவும் இணக்கப்பாடற்ற நிலைமைகள் உருவெடுத்தன. இந்நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரைக் களமிறக்குவதாக இருந்தால் கட்சிகளில் தங்கியிருக்கத் தேவையில்லை என்ற நிலைமை உருவானது.

தமிழ்ப் பொது வேட்பாளர் யார்..! வவுனியாவில் நாளை தீர்மானம் | Who Tamil General Candidate

இவ்வாறான பின்னணியில்தான் மேற்படி நபர்களின் பெயர்கள் இறுதிப்பட்டியலுக்கு வந்துள்ளன. இதில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத போதும் அனைத்துக் கட்சிகளும் அவரை ஏற்றுக்கொள்வார்கள் என்ற அடிப்படையில் சி.வி.விக்னேஸ்வரனின் கட்சி ஊடாக களமிறக்குவதற்கு முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேநேரம், கே.வி.தவராசாவை பொறுத்தவரையில், தமிழ்ப் பொது வேட்பாளர் என்கின்ற விடயத்தில் அனைத்து தரப்பினரும் இறுதியும் உறுதியுமாக இருந்தால் களமிறங்குவதற்குத் தயாராக இருக்கின்றேன் என்ற தொனிப்பட சமிக்ஞை வெளியிட்டுள்ளார்.

இலண்டனில் தங்கியிருக்கும் சந்திரகாந்தனைப் பொறுத்தவரையில், தமிழ்ப் பொது வேட்பாளராகக் களமிறங்குவதற்கு அவர் தயாராக இருப்பதாக அவரை அணுகியவர்களிடத்தில் தெரிவித்துள்ளார்.

ஆனாலும், அதன் பின்னர் அரசியல் செயற்பாடுகளில் பங்கேற்க முடியாது என்ற நிபந்தனை நீக்க வேண்டும் என்றும், அதேபோன்று இந்த விடயம் சம்பந்தமாக இலங்கைக்கு வருகை தந்தே நேரில் உரையாட முடியும் என்றும் கூறியுள்ளதாகத் தகவல்கள் உள்ளன.

மன்னாரில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இளம் தாயின் மரணம்: தண்டனைக்கு உறுதியளித்த எம். பி

மன்னாரில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இளம் தாயின் மரணம்: தண்டனைக்கு உறுதியளித்த எம். பி

பத்து காரணங்கள்

இதேநேரம், சந்திரகாந்தனை நிறுத்துவது மிகப் பொருத்தமானது என்று பத்து காரணங்களைச் சுட்டிக்காட்டி தமிழ்ப் பொதுக் கட்டமைப்பின் ஏனைய அங்கத்தவர்களுக்கு சி.வி.விக்னேஸ்வரன் தகவல் அனுப்பியுள்ளார்.

எந்தவொரு தரப்பினரும் போட்டியிடுவதற்குத் தயாராக இல்லாவிட்டால் கோட்பாட்டு ரீதியாகத் தான் ஆதரிக்கும் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை வலுப்படுத்துவதற்காகக் களமிறங்குகின்றேன் என்று தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அரியநேத்திரனும் தன்னை அணுகியவரிடத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் பொது வேட்பாளர் யார்..! வவுனியாவில் நாளை தீர்மானம் | Who Tamil General Candidate

இதேவேளை, எந்தவொரு தரப்பினரும் பொருந்தாத நிலையில் இறுதியாக சி.வி.விக்னேஸ்வரம் எம்.பியைப் பரிசீலிப்பது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக அவர் இரண்டாவது வாக்கு தொடர்பில் அதிகமாகப் பிரஸ்தாபித்து வருவதால் அவருடைய பெயரை இறுதி நிலையில் வைப்பதற்குப் பொதுக்கட்டமைப்பின் சிவில் தரப்பினர் தீர்மானித்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மேற்படி நால்வரில் ஒருவரை இறுதி செய்வதில் நெருக்கடியான நிலைமைகள் தோன்றினால் பொதுக்கட்டமைப்பின் அங்கத்தவரும், அரசியல், சிவில் செயற்பாட்டாளருமான செல்வின் இரேனியஸ் மரியாம்பிள்ளையை இறுதி ஆயுதமாகப் பயன்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

பசிலுக்கும் ரணிலுக்கும் இடையில் விரிசல் : அம்பலப்படுத்திய நாமல்

பசிலுக்கும் ரணிலுக்கும் இடையில் விரிசல் : அம்பலப்படுத்திய நாமல்

தீக்கிரையாக்கப்பட்ட இலங்கை அரசியல்வாதிகளின் வீடுகள்! காரணம் நாமல்

தீக்கிரையாக்கப்பட்ட இலங்கை அரசியல்வாதிகளின் வீடுகள்! காரணம் நாமல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  


மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், London, United Kingdom

03 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, பரந்தன், வவுனியா, Borken, Germany

26 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நுணாவில், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, Melbourne, Australia

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, Toronto, Canada

15 Aug, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், தேவிபுரம்

21 Aug, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Wembley, United Kingdom

22 Aug, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Vitry-sur-Seine, France

12 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Atchuvely, Montreal, Canada, கொழும்பு, Hatton

20 Aug, 2010
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, உடுவில், Bochum, Germany, Scarborough, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

21 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US