முட்டாள்தனமான தீர்மானத்தை எடுத்தது யார்? - கீதா குமாரசிங்க கேள்வி
மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டமை சரியாக அறிவியல்பூர்வமான அமைச்சரவை நியமிக்கப்பட்டதை போன்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
பெரிய அறுவடையை எதிர்பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை சேர்த்த குளத்தின் நீரை ஒரே தடைவையில் திறந்து அறுவடையை பாதிக்க செய்தமை போன்றது இந்த நடவடிக்கை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இப்படியான முட்டாள்தனமான தீர்மானங்களை எடுப்பது யார் என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன்.
இப்படியான வேலைகள் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினராக தனக்கும் ஊருக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
காலி பெந்தர பிரதேசத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கீதா குமாரசிங்க இதனை கூறியுள்ளார்.
இவ்வாறான நேரத்தில் மதுபான விற்பனை நிலையங்களை திருப்பது சரியல்ல என்பது பாலர் பள்ளியில் படிக்கும் குழந்தைக்கு கூட தெரியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செவ்வாய் - குரு உருவாக்கும் திரிஏகாதச யோகம்... ஜூன் மாதத்தில் இந்த ராசிகளுக்கு பணமழை உறுதி! Manithan
ரிஷப ராசியில் உதயமாகும் புதன் - சுக்கிரன் : இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
தமிழ்நாட்டில் அதிக 100 கோடி வசூல் திரைப்படங்களை கொடுத்த நடிகர்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா? Cineulagam
குடும்பத்தினரைப் பார்க்காமல் நான்கு ஆண்டுகள்... வெளிநாட்டில் கோர விபத்தில் சிக்கிய ஆசிய இளைஞர் News Lankasri