முட்டாள்தனமான தீர்மானத்தை எடுத்தது யார்? - கீதா குமாரசிங்க கேள்வி
மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டமை சரியாக அறிவியல்பூர்வமான அமைச்சரவை நியமிக்கப்பட்டதை போன்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
பெரிய அறுவடையை எதிர்பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை சேர்த்த குளத்தின் நீரை ஒரே தடைவையில் திறந்து அறுவடையை பாதிக்க செய்தமை போன்றது இந்த நடவடிக்கை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இப்படியான முட்டாள்தனமான தீர்மானங்களை எடுப்பது யார் என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன்.
இப்படியான வேலைகள் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினராக தனக்கும் ஊருக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
காலி பெந்தர பிரதேசத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கீதா குமாரசிங்க இதனை கூறியுள்ளார்.
இவ்வாறான நேரத்தில் மதுபான விற்பனை நிலையங்களை திருப்பது சரியல்ல என்பது பாலர் பள்ளியில் படிக்கும் குழந்தைக்கு கூட தெரியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.