இலங்கையின் செயற்பாடு குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ள உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர்
எதிர்வரும் செப்டம்பரில் தடுப்பூசி சமபங்கு இலக்குக்கு முன்னதாக இலங்கை தனது மக்கள் தொகையில் 10 சதவீதமானோருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தும் நிலையில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி சமபங்கின் செப்டம்பர் இலக்குக்கு முன்னதாக இலங்கை தனது மக்கள் தொகையில் 10% மானவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்துவத்தைக் கண்டு மகிழ்ச்சி!இலங்கையின் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் அவர்களின் முயற்சிகளுக்கு நன்றி.
வைரஸை கட்டுப்படுத்துவதற்கான நிரூபிக்கப்பட்ட பொது சுகாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.