அவசரமான தேர்தல் நடத்தப்பட்டால் வெற்றி பெறக்கூடிய கட்சி
அவசரமான தேர்தல் ஒன்று நடத்தப்படுமாயின் கிடைக்கக்கூடிய தேர்தல் முடிவுகள் தொடர்பாக நடத்தப்பட்ட மிகவும் இரகசியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களுக்கு கிடைத்துள்ளதாக தெரியவருகிறது.
ஐக்கிய மக்கள் சக்தி 51 வீத வாக்குகளை பெறும்

இதனடிப்படையில் அவசரமாக தேர்தல் ஒன்று நடத்தப்படுமாயின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி 51 சதவீத வாக்குகளை பெறும் என தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் நேருக்கு நேரான போட்டி ஏற்படும் எனவும் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

இந்த கருத்து கணிப்பு முடிவுகள் கிடைத்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கிராம மட்ட பிரதிநிதிகளை கொழும்புக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam