கோவிட் தொற்று முடிவுக்கு வருவது எப்போது? வெளியாகியுள்ள தகவல்
உலகின் முன்னணி ஆராய்ச்சியாளர்கள் பலர் 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் கோவிட் தொற்று கட்டுப்பாட்டில் இருக்கும் என்று கணித்துள்ளனர்.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய உலகளாவிய தடுப்பூசி செயல்முறை மற்றும் கோவிட் நோயிலிருந்து மீண்டு வருபவர்களுக்கு ஆன்டிபாடிகளின் வளர்ச்சியுடன், கோவிட் நோயை ஒழிக்க தேவையான வெகுஜன நோய் எதிர்ப்பு சக்தி விரைவில் சமூகத்தில் பரவும் என்று அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதியின் வைத்திய ஆலோசகரான வைத்தியர் Dr. Anthony Fauci, மக்களின் ஆதரவுடன், கோவிட் வளர்ச்சியின் அளவை 2022 இல் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, உலகம் முழுவதுமாக தடுப்பூசி போடப்படும் வரை கோவிட் பற்றிய கணிப்புகளுக்கு விரைந்து செல்வது சரியானது அல்ல என்று நிபுணர்களான வைத்தியர் சார்லஸ் பெய்லி, விந்தியா மோய் உள்ளிட்ட பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
