இலங்கை WhatsApp பயனாளர்களின் கணக்குகள் முடக்கப்படும் ஆபத்து
புதிய நிபந்தனைகளை நிராகரித்த இலங்கை வட்ஸ்அப் பயனாளர்கள் ஆயிரக்கணக்கானோரின் கணக்குகள் முடக்கப்படும் ஆபத்துக்கள் உள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகளையும் தனியுரிமைக் கொள்கையின் தொகுப்பையும் மே 15 ஆம் திகதிக்குள் ஏற்றுக்கொள்ளாத அனைத்து வாட்ஸ்அப் பயனர்களும் இனிமேல் குறுந்தகவல் பெறவோ அல்லது செய்திகளை அனுப்பவோ முடியாதென என வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.
புதிய விதிமுறைகளையும் கொள்கைகளையும் ஏற்றுக்கொள்ளாத பயனர்களுக்கு தற்காலிகமாக வரையறுக்கப்பட்ட நேர அழைப்புகள் மற்றும் அறிவிப்புகளை மாத்திரமே வழங்கப்படும் என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன் பின்னர் புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையின் தொகுப்பை ஏற்காத வாட்ஸ்அப் பயனர்களின் கணக்குகள் செயலற்ற கணக்குகள் என்று பட்டியலிடப்படும்.
மேலும் 120 நாட்களுக்குப் பிறகு செயலற்ற கணக்குகள் நீக்கப்படும் என்று இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.





Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri
