வவுனியா குடும்பத்திற்கு நடந்தது என்ன...! இரவில் வந்த மர்ம வாகனம் - வெளியான புதிய தகவல்
வவுனியா, குட்ஷெட் தெருவில் உள்ள வீடொன்றில் இருந்து மீட்கப்பட்ட தம்பதிகள் மற்றும் அவர்களது இரண்டு பிள்ளைகளின் சடலங்கள் தொடர்பான பிரேதப் பரிசோதனைகள் நேற்று வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் இடம்பெற்றன.
வவுனியா நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போதிலும், மரணத்திற்கான சரியான காரணம் நேற்றைய தினம் வெளியாகவில்லை.
தாமதமாகியுள்ள பிரேத பரிசோதனைகள்
சிவபாலசுந்தரம் கௌசிகன் என்ற 41 வயதுடைய நபர், அவரது மனைவி 36 வயதுடைய கௌசிகன் வரதராஜினி மற்றும் மகள்களான 09 வயதுடைய கௌசிகன் மைதிரா மற்றும் 03 வயதான கௌசிகன் கேசரா ஆகியோரின் சடலங்களுக்கே பிரேத பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
வைத்தியசாலையின் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தினால் சடலங்களின் பிரேதப் பரிசோதனைகள் தாமதமாகியுள்ளதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தமைக்கான சரியான காரணத்தை கண்டறிய உடல் உறுப்புகள் மற்றும் இரத்த மாதிரிகள் அரசாங்க மரண விசாரணை திணைக்களம் மற்றும் மருத்துவ ஆய்வு கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டுத்தலைவர் கடனை செலுத்த முடியாத காரணத்தினால் இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அதுதான் சரியான காரணம் என்று கூற முடியாது என உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் வெளிநாட்டு முகவர் நிறுவனத்தை நடத்தி வந்த நிலையில், மனைவி வவுனியா பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்துள்ளார்.
இதேவேளை உயிரிழந்தவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகமும் வெளியிடப்பட்டுள்ளது. உயிரிழந்த சம்பவ தினத்தன்று அந்த வீட்டுக்கு ஹயஸ் வாகனம் ஒன்று வந்து சென்றுள்ளமை பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அந்த வாகனத்தில் வந்தவர்கள் யார் என்பது தெரியாத நிலையில் அது தொடர்பாக பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri
