இலங்கையில் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்ட சிறுவர்களுக்கு நடந்தது என்ன? - செய்திகளின் தொகுப்பு
இலங்கையில் இதுவரை 500 சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசியை பெற்றுக் கொண்டபின் சிறுவர்களுக்கு ஏதாவது அசௌகரியங்கள் ஏற்பட்டதாக இதுவரை முறைப்பாடுகள் கிடைக்கவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, 12 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட நோயாளர்களான சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் அக்டோபர் முதலாம் திகதி முதல் நாடு முழுவதும் விரிவுபடுத்தவுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த வகையில், நாடு முழுவதும் நோயாளர்களான சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகள் மூலம் முன்னெடுக்கப்படும் என்று சிறுவர் நோய் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் சுரந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,

பிரித்தானியாவை நேரடியாக எச்சரிக்கும் அமெரிக்கா - லண்டனில் சூப்பர் தூதரகத்தை கட்டும் சீனா News Lankasri
