அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் சுமந்திரன் தரப்புடன் நடந்தது என்ன? நேரடி ரிப்போர்ட் (Video)
தாயகத்தில் வாழும் மக்கள் தற்போது புதுவித இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். ஒரு யுத்தம் முடிவடைந்தாலும் அங்கு அமைதி ஏற்படவில்லை. நிலைமாறு கால நீதிக்கான முயற்சிகள் பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் கூட அவற்றில் ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என அமெரிக்காவில் இருக்கக்கூடிய முக்கியஸ்தர் கலாநிதி எலியஸ் ஜெயராஜா தெரிவித்துள்ளார்.
லங்காசிறீயின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அண்மையில் இலங்கையில் இருந்து அரசியல் பிரமுகர்கள் உள்ளடங்கலாக புலம்பெயர்ந்து இருக்கக்கூடிய அமைப்புக்களுடன் அமெரிக்காவினுடைய முக்கிய திணைக்களங்கள் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தது.
அதனுடைய முக்கியத்துவம் எந்த அளவில் உணரப்பட்டிருக்கின்றது. இன்றைய சூழலில் அதனுடைய தாக்கங்கள் எப்படி வெளிப்படுத்தப்படவிருக்கின்றன. இந்த சந்திப்பினுடைய உண்மையான நோக்கங்கள் என்ன? சந்திப்பில் கலந்து கொண்டிருந்தவர்கள் தொடர்பில் இன்று இருக்கக்கூடிய அரசியல் சூழ்நிலை எப்படி இருக்கின்றது தொடர்பில் கலாநிதி எலியஸ் ஜெயராஜா விரிவான விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,