கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடந்தது என்ன? - CCTV மூலம் வெளியான உண்மை
இலங்கைக்கு சுற்றுலா வந்த அமெரிக்கர் ஒருவர் ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பில் பயணி ஒருவர் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இலங்கைக்கு பயணித்து போக்குவரத்து வசதி மற்றும் ஹோட்டல் வசதி பெற்றுக் கொள்ள முடியாமை குறித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். எனினும் குறித்த நபர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட வீடியோவில் இருந்த குற்றச்சாட்டை விமான சேவை நிறுவனம் நிராகரித்துள்ளது.
குறித்த பயணி தொடர்பில் CCTV காணொளியில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் வெளியிட்ட கருத்துக்கள் முற்றிலும் போலியானதென தெரியவந்துள்ளது.
ஜோர் என்ற அமெரிக்க பயணி கடந்த 6ஆம் திகதி இலங்கை வருவதாக குறிப்பிட்டு வாடகை வாகனத்திற்கு பதிவு செய்துள்ளார். எனினும் அவர் ஜெர்மனியில் பதிவு செய்யப்பட்ட மூன்றாம் தரப்பு இணையதளத்தில் இருந்து 6 ஆம் திகதி இலங்கை வாகன நிறுவனத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்றை முன்பதிவு செய்துள்ளார்.
எப்படியிருப்பினும் அவர் இலங்கைக்கு 7ஆம் திகதியே வருகை தந்துள்ளார். அவருக்கான வாகனம் 6ஆம் திகதியே விமான நிலையத்திற்கு வருகைத்துள்ளது.
வாகனத்தின் சாரதி நீண்ட நேரம் காத்திருந்தார். எனினும் அவர் இலங்கை வரவில்லை என அறிந்த பின்னரே சாரதி அங்கிருந்து சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது.
திகதியை பிழையாக தெரிவு செய்து அமெரிக்கர் அதிருப்பத்தி வெளியிட்டுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 23 மணி நேரம் முன்
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam