பல கோடிகள் பெறுமதியான திமிங்கல வாந்தி! கொழும்பு புறநகரில் சோதனையில் சிக்கியது
ஐந்து கோடிக்கும் அதிக பெறுமதி கொண்ட திமிங்கில அம்பர் எனப்படும் திமிங்கல வாந்தியை வைத்திருந்த நபரொருவர் கொழும்பின் புறநகர் பகுதியான, நியதகல - பன்னிபிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை நேற்றைய தினம் (20.04.2023) பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
விசேட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 14.3 கிலோகிராம் எடையுடைய அம்பர் மீட்கப்பட்டுள்ளது.

விலையுயர்ந்த வாசனை திரவிய தயாரிப்பு
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மீகொட பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடையவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
திமிங்கல வாந்தியானது உலகின் மிக விலையுயர்ந்த வாசனை திரவியத்தை தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
திருமணம் ஆன மூன்றே வருடத்தில் விவாகரத்து செய்கிறாரா பிரபல நடிகர்... டெலிட் செய்த போட்டோஸ் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan