வேகமாக பரவும் கொவிட் தொற்று - முடக்கப்படும் அபாய கட்டத்தில் மேல் மாகாணம்
மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் கொவிட் தொற்று பரவல் ஏனைய பிரதேசங்களை விடவும் அவதானமிக்க நிலைமையில் உள்ளதாக புதிய சுகாதார அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று நோய் விஞ்ஞான பிரிவினால் வெளியிடப்பட்ட கடந்த 7 நாள் அறிக்கைக்கமைய இந்த விடயம் வெளியாகியுள்ளது.
அவ்வாறான நிலைமையில் டெல்டா வைரஸ் மாறுபாடு தொடர்பில் உரிய பாதுகாப்பின்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதன் மூலம் எதிர்வரும் நாட்களில் முழு நாட்டிற்கும் மிகவும் அவதானமிக்க நிலைமை ஏற்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தற்போதைய நிலையில் மேல் மாகாணத்தில் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை வேகமாக முன்னெடுக்க சுகாதார பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. பொறுப்பற்ற வகையில் செயற்பாடுகள் தொடருமாயின் மேல் மாகாணம் முழுமையாக முடக்கப்படும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
