வெலிகம பிரதேச சபையின் தலைவர் தொடர்பில் மீண்டும் சர்ச்சை..
பல சர்ச்சைக்குரிய சம்பவங்களுக்குக் களமாக இருந்த வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் கோரம் இல்லாததால் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான லசந்த விக்ரமசேகர படுகொலை செய்யப்பட்டதையடுத்து வெலிகம பிரதேச சபைத் தலைவர் பதவி வெற்றிடமானது.
தொடரும் சர்ச்சைகள்
தென் மாகாண சபையின் உள்ளூராட்சி ஆணையாளரின் தலைமையில் நவம்பர் 28 ஆம் திகதி புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக சபை கூட்டப்பட்ட போதும் கோரம் இல்லாததால், தேர்தல் வாக்கெடுப்பு இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி, 45 உறுப்பினர்களைக் கொண்ட வெலிகம பிரதேச சபையின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக இன்று (26) காலை 10:00 மணிக்கு சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
ஆனால், இன்றைய சபைக் கூட்டத்திலும் 22 உறுப்பினர்களே கலந்து கொண்டதால், போதுமான கோரம் இல்லாததால் தலைவர் தேர்வை ஒத்திவைக்க உள்ளூராட்சி ஆணையாளர் நடவடிக்கை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri