மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை கைவிடும் திட்டம் இல்லை! வெளியான அறிவிப்பு
நாட்டு மக்களுக்கு அரசினால் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை கைவிடும் திட்டம் இல்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு, இதனை அறிவித்துள்ளது.
சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் டிசம்பர் மாதத்திற்குப் பின்னர் குறைக்கப்படும் என வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொடுப்பனவு
இதேவேளை, சிறுநீரக நோயாளர்களுக்கான 7,500 ரூபா கொடுப்பனவை 10,000 ரூபாவாக அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அத்துடன், அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் சமூக வலுவூட்டல் திட்டங்களுக்குப் பிராந்திய செயலக மட்டத்தில் தகவல்கள் புதுப்பிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகத்தின் தகவல்களின்படி, நாட்டில் தற்போது 47,244 சிறுநீரக நோயாளிகள் இருப்பதாகவும், எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம், எனவே இந்த தகவலை புதுப்பிக்க வேண்டியது மிகவும் அவசியம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 2ஆம் நாள் - மாலை திருவிழா





கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan
