எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் இலங்கையில் நடைமுறையாகும் திட்டம்! மக்களுக்கு வழங்கப்படும் சந்தர்ப்பம்
வறுமைக்கோட்டின் கீழுள்ள குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள நிவாரணத் திட்டங்களில் இடம்பெறாத நபர்கள் அது தொடர்பில் மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க முடியுமென, ஜனாதிபதி செயலணியின் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இந் விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், நாட்டில் வறுமை நிலையிலுள்ள குடும்பங்களுக்கு அரசாங்கம் திட்டமிட்டபடி நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும். இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் ஜுலை முதலாம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.
அந்த வகையில் தகுதியிருந்தும் அந்த திட்டத்தில் உட்படாதவர்கள் தமக்கான நிவாரணம் தொடர்பில் மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க முடியும். அதற்கான வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளது என்றார்.
இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
