எரிபொருள் தட்டுப்பாடு:திருமணங்களுக்கு விடுக்கப்படும் அழைப்பை நிராகரிக்கும் சபாநாயகர்
திருமண வைபவங்களில் மணமக்கள் சார்பில் கையெழுத்திட வருமாறு விடுக்கப்படும் அழைப்புகளை நிராகரிக்க வேணடியே நிலைமை ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது காணப்படும் எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைமைக்கு அமைய திருமண வைபவங்களில் கூட கலந்துககொள்வது சிரமமாகியுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு எல்லோரையும் பாதித்துள்ளது.
நாடாளுமன்றக் கூட்டத்தில் பலர் கலந்துக்கொள்ள மாட்டார்கள்
இந்த நிலைமை ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
எரிபொருள் பிரச்சினை காரணமாக இம்முறை நாடாளுமன்றக் கூட்டத்தில் பலர் கலந்துக்கொள்ள மாட்டார்கள் என நம்புகிறேன் எனவும் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.