சீரற்ற காலநிலையினால் நுவரெலியா மாவட்டத்தில் 6 பேர் பலி
சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஆறு பேர் உயிரிழப்பு
மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 93 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும், ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தின் நிலைமைகள் குறித்து ஜனாதிபதிக்கு தொலைபேசி ஊடாக தெளிவுபடுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினரும் உள்ளூர் அதிகாரிகளும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சகல உதவிகளையும் வழங்குவதற்க ஜனாதிபதி செயலகம் இணங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
93 people displaced and 6 people dead due to the severe weather and landslides in Nuwara Eliya.
— Jeevan Thondaman (@JeevanThondaman) August 1, 2022
All local authorities, army personnel & volunteers on ground.
Spoke to @RW_UNP and updated him on the situation. GA Nuwara Eliya has been contacted by the President's office.

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
