கிளிநொச்சியில் அமைந்துள்ள பிரதான பாலத்தை புனரமைக்கும் பணி முன்னெடுப்பு
பேரிடர் காரணமாக கடந்த மாதம் 28ஆம் திகதி ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தின் ஏ 35 பிரதான வீதியில் 11ஆம் மைக்கல் பகுதியில் அமைந்துள்ள பிரதான பாலமானது பாதிப்படைந்தது.
இதன் காரணமாக கிளிநொச்சி - முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது கிளிநொச்சி - முல்லைத்தீவுக்கான போக்குவரத்து வட்டக்கச்சி ஊடாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
புனரமைப்பு பணி
இவ்வாறான சூழலில் சேதமடைந்த பாலத்தை புனரமைக்கும் பணியில் இந்திய இராணுவம் மற்றும் இலங்கை இராணுவம், வீதி அபிவிருத்தி திணைக்களம் இணைந்து துரித கதியில் புனரமைப்பு பணிகளை முன்னெடுத்துள்ளது.
புனரமைப்பு பணிகள் தற்பொழுது நிறைவு கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்னும் ஓரிரு தினங்களில் இப்பாலமானது முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட உள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan