மக்களே அவதானம்! காலநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை
வளிமண்டலவியல் திணைக்களம் காலநிலை மாற்றம் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காணப்படும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவப்பு எச்சரிக்கை
இந்த அறிவிப்பு அரபிக் கடல் பகுதியில் உள்ள நெடுநாள் மீன்பிடி கடற்தொழிலாளர்கள் மற்றும் கடல்சார் சமூகத்திற்காக வெளியிடப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (30) காலை 6.00 மணியளவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை தென்மேற்கு பருவக்காற்று வலுவடைந்துள்ளமை காரணமாக அரபிக் கடல் பகுதியில் கடும் காற்று (70-80 kmph) நிலவும் என்று திணைக்களம் குறிப்பிடுகிறது.
இதனால் கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
வேகமான காற்று
இதேவேளை,மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இடைக்கிடையில் மணித்தியாலத்திற்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri
