சீரற்ற காலநிலை - மக்களுக்கு இலங்கை மின்சார சபையின் அறிவிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பிரதேசங்களில் ஏற்படும் மின்சாரத்தடை தொடர்பில் தகவல் வழங்க 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இந்த அவசர தொலைபேசி இலக்கமானது 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
மின்தடை தொடர்பில் இலங்கை மின்சார சபையின் செயலியை பயன்படுத்தி முறைப்பாடளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவி வருகிறது.
இவ்வாறான பகுதிகளின் சில இடங்களில் மின்தடை பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.
அறிவிப்பு
இந்த நிலையில் நாடு முழுவதும் மின் சீரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இவ்வாறான சூழலிலேயே இலங்கை மின்சார சபையின் தொலைபேசி பயன்படுத்தி சிக்கல்களைப் புகாரளிக்குமாறு பொது மக்களை கேட்டுக்கொள்வதாக இலங்கை மின்சார சபையின் பொது கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிந்த பிறகும் ஜோடியாக சுற்றிய தீபிகா-சரவணன் இடையில் இப்படியொரு பிரச்சனையா? Cineulagam