சீரற்ற காலநிலையால் வயல் நிலங்கள் முற்றாக பாதிப்பு
கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலகத்திற்குட்பட்ட கிளாலி பகுதியில் அடை மழை காரணமாக சுமார் 20 ஏக்கர் வயல் நிலங்கள் முற்றாக பாதிப்படைந்துள்ளன.
கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிளாலி கிராமத்திலும் , யாழ் மாவட்டத்திலும், கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லைப்பகுதியிலும் சுமார் 20 ஏக்கர் வயல் நிலங்களுக்குள் மழைநீர் உட்புகுந்து வயல்கள் முற்றாக நாசமடைந்துள்ளது.
குறித்த எல்லைப்பகுதியில் ஒரு வாய்க்கால் இருப்பதாகவும் குறித்த வாய்க்காலில் கழிவு குப்பைகள் உள்ளதனால் தேங்கி நிற்கும் நீர் கடலுக்குள் செல்ல வழியில்லாமையினாலேயே குறித்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
வயல் நிலங்கள் மாத்திரமன்றி இப் பிரதேசத்தில் வீதிகள், வீடுகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் என்பனவும் வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளன. 2020 ஆம் ஆண்டும் இவ்வாறே வயல் நிலங்கள் பாதிப்படைந்தது எனவும் இதுவரையில் எந்தெவொரு அமைப்புக்களோ,அதிகாரிகளோ,அரசியல்வாதிகளோ எவருமே தம்மை வந்து பார்வையிடவில்லை எனவும் எவ்வித நஸ்ட ஈடுகளும் தமக்கு வழங்கப்படவில்லை எனவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறித்த வாய்க்காலினால் தமது கிராமமே வெள்ளத்தால் ழூழ்கியுள்ளது இதனால் தமது வாழ்வாதாரமும் முற்றாக பாதிப்படைந்துள்ளதெனவும் இதனை கருத்திற்கொண்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அமைப்புகள் முன் வந்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


பதினாறாவது மே பதினெட்டு 1 மணி நேரம் முன்

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam
