இரத்மலானையில் பெரும் தொகை வெடிபொருட்கள் மீட்பு
இரத்மலானையில் உள்ள ஒரு கொங்கிரீட் உற்பத்தி நிறுவனத்தின் தங்கும் விடுதியில் பெரும் தொகையான வெடிபெருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்டுள்ள கத்திகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அதில் தங்கியிருந்த இரண்டு ஊழியர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதில் ஒருவர் முன்னாள் இராணுவ கமாண்டோ வீரராவார்.
கைப்பற்றப் பொருட்கள்
கைப்பற்றப்பட்ட பொருட்களில் ஏழு T-56 தோட்டாக்கள், இரண்டு T-56 வெற்று ஷெல் உறைகள், ஒரு T-56 பயிற்சி தோட்டா, 9 மிமீ 17 வெடிமருந்துகள், இரண்டு கூர்மையான கத்திகள் மற்றும் ஒரு சைக்கிள் சங்கிலி ஆகியவை.
சந்தேக நபர்கள் பணிபுரியும் கொங்கிரீட் நிறுவனத்தின் மேலாளர், ஊழியர்கள் தங்கியுள்ள தங்குமிடத்தை வருடத்திற்கு பல முறை பரிசோதனை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, நேற்று பரிசோதித்த போதே இந்த ஆயுதங்கள் மற்றும் கத்திகள் சந்தேக நபர்களின் அலுமாரிகளில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri