ட்ரம்ப் இழைத்த வரலாற்று குற்றம்! இரத்தக்களரியை ஏற்படுத்தப் போவதாக ஈரான் பரபரப்பு அறிவிப்பு
புதிய இணைப்பு
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பழிவாங்குவதை ஈரான் தனது "சட்டபூர்வமான உரிமை மற்றும் கடமை" என்று கருதுவதாக ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் கூறியுள்ளார்.
ஈரானிய அரசு ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,
உச்ச தலைவர் அலி கமேனி "உலகின் மிகவும் மோசமான எதிராளிகளின் கைகளில்" கொல்லப்பட்டார் என்று பெஷேஷ்கியன் கூறினார்.
"இந்த வரலாற்று குற்றத்தைச் செய்தவர்கள் மற்றும் தளபதிகளுக்கு எதிராக இரத்தக்களரி மற்றும் பழிவாங்கலை ஈரான் இஸ்லாமிய குடியரசு அதன் கடமையாகவும் சட்டபூர்வமான உரிமையாகவும் கருதுகிறது, இந்த பெரிய பொறுப்பையும் கடமையையும் அதன் முழு பலத்துடன் நிறைவேற்றும்" என்று பெஷேஷ்கியன் கூறினார்.
இரண்டாம் இணைப்பு
ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை அடையாளம் கண்டுள்ளதாகவும், தற்காப்பு அமைப்புகள் செயல்பாட்டில் இருப்பதாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரான் இன்று காலை முதல் மத்திய கிழக்கு முழுவதும் புதிய தாக்குதல் அலைகளைத் தொடங்கியுள்ளது. பல தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் வெடிப்புச் சத்தங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, இஸ்ரேல் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களின் "ஆறாவது அலை"யைத் தொடங்கியதாகக் கூறியதாக ஈரானின் அரை அதிகாரப்பூர்வ தஸ்னிம் செய்தி நிறுவனம் முன்னர் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை அடையாளம் கண்டுள்ளதாகவும், தற்காப்பு அமைப்புகள் செயல்பாட்டில் இருப்பதாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. மத்திய மற்றும் தெற்கு இஸ்ரேல் முழுவதும் சைரன்களின் ஒலி கேட்டவண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
துபாய் மற்றும் கட்டார் உள்ளிட்ட நாடுகளில் ஆங்காங்கே மீண்டும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்ளூர் நேரப்படி இன்று(01.03.2026) காலை 07.30 மணியளவில் இவ்வாறு வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானின் உச்சத் தலைவரான அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்ட பிறகு ஈரான் பதில் தாக்குதலை நடத்தி வருவதாகவும் இதன் காரணமாக, குவைத் உள்ளிட்ட நாடுகளில் வான்பரப்பில் சைரன்களை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீண்டும் மீண்டும் கேட்கும் வெடிச் சத்தங்கள்
இதன்படி, ஈரான் இன்று காலை மத்திய கிழக்கு முழுவதும் புதிய தாக்குதல் அலைகளைத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் வெடிப்புச் சத்தங்கள் அவதானிக்கப்பட்டுளு்ளன.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை இஸ்ரேல் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களின் "ஆறாவது அலை" ஒன்றை நடத்தியதாகக் கூறியதாக ஈரானின் அரை அதிகாரப்பூர்வ தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய மற்றும் தெற்கு இஸ்ரேல் முழுவதும் பல சுற்று சைரன்கள் ஒலித்ததாக சிஎன்என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

துபாயில் உள்ளூர் நேரப்படி காலை 8:15 மணியளவில் மூன்று பெரிய குண்டுவெடிப்புச் சத்தங்கள் அவதானிக்கப்பட்டுள்ளது. கத்தாரின் தோஹாவில் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 மணிக்கு பல பெரிய வெடிப்பு சத்தங்கள் கேட்டுள்ளன.
பஹ்ரைனின் உள்துறை அமைச்சகம் இன்று காலை நாட்டில் சைரன்கள் ஒலித்ததாகவும், குடியிருப்பாளர்கள் "அமைதியாக அருகிலுள்ள பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு" எச்சரித்ததாகவும் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது.
மேலும், ஈராக்கிய நகரில் இன்று காலை பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மத்திய கிழக்கில் போர் பதற்றம்! இலங்கையிலிருந்து வெளியேற தடுமாறும் வெளிநாட்டவர்களுக்கு அவசர அறிவிப்பு
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam