தொற்று நோய் காலத்தில் 10 பணக்காரர்களின் செல்வம் இரட்டிப்பாக அதிகரிப்பு
கோவிட்-19 வைரஸ் தொற்று காலத்தில் உலகில் உள்ள செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாக மாறியுள்ளதுடன் வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஒக்ஸ்பார்ம் (Oxfam) தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உலகில் 10 செல்வந்த நபர்களின் ஒட்டுமொத்த செல்வம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
எனினும் குறைந்த வருமானம் காரணமாக தினமும் 21 ஆயிரம் மக்கள் மரணடைவதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. ஒக்ஸ்பார்ம் நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை கூறியுள்ளது.
ஒக்ஸ்பார்ம் நிறுவனம் வழமையாக டாவோஸில் நடைபெறும் வருடாந்த உலக பொருளாதார ஒன்றியத்தின் மாநாட்டின் ஆரம்பத்தில் உலக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் தொடர்பான அறிக்கையை வெளியிட்டு வருகிறது.
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri