தொற்று நோய் காலத்தில் 10 பணக்காரர்களின் செல்வம் இரட்டிப்பாக அதிகரிப்பு
கோவிட்-19 வைரஸ் தொற்று காலத்தில் உலகில் உள்ள செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாக மாறியுள்ளதுடன் வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஒக்ஸ்பார்ம் (Oxfam) தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உலகில் 10 செல்வந்த நபர்களின் ஒட்டுமொத்த செல்வம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
எனினும் குறைந்த வருமானம் காரணமாக தினமும் 21 ஆயிரம் மக்கள் மரணடைவதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. ஒக்ஸ்பார்ம் நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை கூறியுள்ளது.
ஒக்ஸ்பார்ம் நிறுவனம் வழமையாக டாவோஸில் நடைபெறும் வருடாந்த உலக பொருளாதார ஒன்றியத்தின் மாநாட்டின் ஆரம்பத்தில் உலக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் தொடர்பான அறிக்கையை வெளியிட்டு வருகிறது.

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan
