திருடர்கள்-குற்றவாளிகளுடன் கூட்டிணைய மாட்டோம்! சந்திம வீரக்கொடி உறுதி
உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைப் பிடித்துக் கொள்வதற்காக திருடர்கள் மற்றும் குற்றவாளிகளுடன் கூட்டிணையப் போவதில்லை என்று சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் ஆளுங்கட்சியோ, எதிர்க்கட்சியோ பெரும்பான்மையைப் பெறாத நிலையில் உள்ளன.
சந்திம வீரக்கொடி உறுதி
அவ்வாறான இடங்களில் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஏனைய தரப்புகளுடன் இணைந்து ஆட்சியமைப்பதில் எதுவித தவறும் இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
எனினும் அவ்வாறு கூட்டுச் சேரும் போது திருடர்கள், பாதாள உலகக்கும்பல்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவர்களுடன் கூட்டிணைவதில்லை என்ற நிலைப்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி உறுதியாக இருப்பதாகவும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.