தேர்தல் மூலம் ஆட்சியை பிடிப்பதாக கூறும் மொட்டுக் கட்சி - செய்திகளின் தொகுப்பு
பொதுஜன பெரமுனவுக்கு அமைச்சரவையில் முன்னுரிமை வழங்காத காரணத்தால் ஜனாதிபதியை பகைத்துக் கொள்ள போவதில்லை. நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம்.
தேர்தல் ஊடாக மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெறுவதற்கு எஸ்.எம்.சந்திரசேன,விமலவீர திஸாநாயக்க ஆகிய சிரேஷ்ட உறுப்பினர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்கள்.
ஆட்சியில் இருக்குமு் போதும், ஆட்சியில் இல்லாத போதும் இவர்கள் ராஜபக்சர்களுடன் இருந்தார்கள். பொருளாதார பாதிப்பு அரசியல் நெருக்கடியாக மாற்றமடைந்ததை தொடர்ந்து நெருக்கடி நிலைக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய கட்சி எடுத்த தீர்மானத்துக்கு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அனைவரும் நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்கினார்கள்.
இது தொடர்பிலான மேலும் பல தகவல்களை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,



