கட்சி என்ன தீர்மானம் எடுத்தாலும் நாம் ரணிலுடன் : பிரமித பண்டார
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி எவ்வாறான தீர்மானம் எடுத்தாலும் தாம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கே ஆதரவு வழங்குவதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
தாமும் தமது தந்தையான ஜனக பண்டார தென்னக்கோனும் ஜனாதிபதிக்கே ஆதரவளிக்கப் போவதாக குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடி
தமது தந்தை மட்டுமன்றி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
நாடு எரிமலை போன்றிருந்த போது எவரும் அந்தப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறான சந்தர்ப்பத்தில் எவ்வித தயக்கமும் இன்றி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்று பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியினால் எடுக்கப்பட்ட தீர்மானம் யதார்த்தத்தை புரிந்து கொள்ளாது எடுக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீர்மானத்தின் பிரதிபலன்கள் விரைவில் தெரிய வரும் என அவர் கூறியுள்ளார்.
பொருளாதார நெருக்கடி நிலைக்கு தீர்வு வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கே பூரண ஆதரவு வழங்கப்படும் என பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

Viral video: பர்சை எடுக்க குனிந்த காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி- காதலி செயலால் குழம்பி தருணம் Manithan

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri
