பண்டிகைக் காலங்களில் அரிசி பற்றாக்குறை ஏற்படாது – விவசாய அமைச்சர்
எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் அரிசி பற்றாக்குறை ஏற்படாது என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த உறுதிப்படுத்தியுள்ளார்.
அரிசி பற்றாக்குறை ஏற்பட்டால், அதை சமாளிக்க அரசு இறக்குமதி கொள்கையை பின்பற்றும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேபோல், கடந்த நாட்களில் அரிசி பற்றாக்குறை ஏற்பட்டபோது அரசாங்கம் அதனை இறக்குமதி செய்தமை குறித்து அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எமது அடிப்படை கொள்கை இறக்குமதி செய்வதை விட உற்பத்தியை அதிகரிப்பதேயாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், அரிசி பற்றாக்குறை ஏற்பட்டால், நாம் இறக்குமதிக்கு செல்வதே தவிர வழியில்லை," என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஆட்சியில் ஏற்பட்ட உரப் பற்றாக்குறை காரணமாக அரிசி பிரச்சினை தோன்றியதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றின் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 19 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
